sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

மன மேலாண்மை மண்டல மாநாடு

/

மன மேலாண்மை மண்டல மாநாடு

மன மேலாண்மை மண்டல மாநாடு

மன மேலாண்மை மண்டல மாநாடு


UPDATED : ஏப் 13, 2024 12:00 AM

ADDED : ஏப் 13, 2024 10:32 AM

Google News

UPDATED : ஏப் 13, 2024 12:00 AM ADDED : ஏப் 13, 2024 10:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:
மதுரையில் மனதை கட்டுப்படுத்துதல், ஒருமைப்படுத்துவது குறித்த மன மேலாண்மை எனும் தலைப்பில் மண்டல மாநாடு நடந்தது.

மைண்ட் மேனேஜ்மென்ட் பவுண்டேஷன், சீக் பவுண்டேஷன் ஆகியவை சார்பில் நடந்த இந்நிகழ்ச்சியில் வாழ்க்கை பயிற்சியாளர் மற்றும் ஆலோசகர் மற்றும் பயிற்சியாளர் ஸ்டீபன் முத்து தலைமை வகித்தார். மைண்ட் மேனேஜ்மென்ட் பவுண்டேஷன் தலைமை செயல் அலுவலர் விமலா, மதுரை அப்போலோ மருத்துவமனை முதன்மை செயல் அலுவலர் நீலகண்ணன், ரோட்டரி கிளப் கவர்னர் ராஜா கோவிந்தசாமி, மடீட்சியா செயலாளர் கோடீஸ்வரன், ரோட்டரி கிளப் துணை கவர்னர் ஆண்டனி பிரேம்குமார், மதுரை மறைமாவட்ட பாஸ்டரேட் இயக்குனர் பால் பிரிட்டோ உட்பட பலர் பங்கேற்றனர்.

இந்த அமைப்புகள் சார்பில் பள்ளி, கார்ப்பரேட் நிறுவனங்களில் மனஅழுத்தம் போன்றவற்றில் இருந்து விடுவித்துக் கொள்வது பற்றி பயிற்சி அளிக்கின்றனர்.

அதன்படி வாழ்க்கையில் பீல் குட், டூ குட் என்ற பொருளில் நல்லதை உணர்ந்து, நல்லதையே செய்ய வேண்டும் என ஆலோசனை வழங்கினர்.

இந்த அமைப்பின் துாதுவர்களாக இருந்து அன்பு, கனிவு, கருணை ஆகியவற்றை பரப்பும் வருமான வரித்துறை கமிஷனர் கிளமென்ட், பிரமுகர்கள் இளங்கோ பாக்கியராஜ், பால்ராஜ், பிரேம்ராஜ், ராஜகோபாலன், சுதாகர், டாக்டர் செல்வமணி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us