வெண்ணைமலை கொங்கு பள்ளிபிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி
வெண்ணைமலை கொங்கு பள்ளிபிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி
UPDATED : மே 14, 2026 06:01 PM
ADDED : மே 14, 2026 06:03 PM
கரூர்:
கரூர், வெண்ணைமலை கொங்கு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வில், 183 மாணவ மாணவியர் தேர்வு எழுதினர். அதில், அனைத்து மாணவர்களும் பாஸாகி, 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளனர்.
பிளஸ் 2 பொதுத் தேர்வில் கொங்கு பள்ளியை சேர்ந்த அகமது பர்கான் மற்றும் நிகிதா ஆகியோர் தலா, 569 மதிப்பெண்களும், தர்ஷினி, 566 மதிப்பெண்களும், ஆகாஷ், 565 மதிப்பெண்களும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
மேலும் இப்பள்ளி மாணவ மாணவியர், 550 மதிப்பெண்களுக்கு மேல், 40 பேரும், 500 மதிப்பெண்களுக்கு மேல், 72 மாணவர்களும், 450 மதிப்பெண்களுக்கு மேல், 94 மாணவர்களும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். கணினி அறிவியல் பாடத்தில் இரண்டு மாணவ மாணவியர், 100க்கு100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ மாணவியருக்கு, கொங்கு கல்வி அறக்கட்டளையின் தலைவர் கொங்கு அட்லஸ் நாச்சிமுத்ஆ, பொன்னாடை அணிவித்து பரிசு வழங்கி பாராட்டினார்.
அப்போது, பள்ளி தாளாளர் பாலுகுருசுவாமி, அறக்கட்டளை செயலர் சண்முகம், அறக்கட்டளை பொருளாளர் பிரேம் வீரப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.
