UPDATED : மார் 30, 2026 06:24 PM
ADDED : மார் 30, 2026 06:28 PM
ஈரோடு:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே பல்லாக்காபாளையத்தில் செயல்பட்டு வரும், தன்வந்திரி செவிலியர் கல்லுாரி, 25ம் ஆண்டு விழா நடந்தது.
கல்லுாரி தலைவர் டாக்டர் கணபதி தலைமை தாங்கினார். பேராசிரியர் ரேவதி வரவேற்புரையாற்றினார். சக்தி மசாலா நிர்வாக இயக்குனர் சாந்தி துரைசாமி, கல்லுாரி அறங்காவலர் ஷோபனா கணபதி, டாக்டர் பானுமதி ரகுபதி, டாக்டர் சந்தியா ராம்குமார், டாக்டர் பிரியங்கா jகோபிகிருஷ்ணன் குத்து விளக்கேற்றினர். செவிலியர் கல்லுாரி முதல்வர் பத்மாவதி ஆண்டறிக்கை வாசித்தார்.
விழாவில், 25 ஆண்டுகளாக பணியாற்றிய பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து சான்றிதழ் வழங்கப்பட்டது. மில்கா ஒண்டர் கேக் நிர்வாக இயக்குனர் ராஜா, ராம்பிரசாத், கல்லுாரி துணை தலைவர் டாக்டர் கவுதம் கணபதி, இருதய அறுவை சிகிச்சை நிபுணர் ரகுபதி, தன்வந்திரி செவிலியர் கல்லுாரி மக்கள் தொடர்பு அதிகாரி மகாதேவன் வாழ்த்துரை வழங்கினர்.
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற செவிலியர் கல்லுாரி மாணவ மாணவிகளுக்கு, சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.

