sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

கவுரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.50,000 ஊதியம் வழங்க வேண்டும் : அண்ணாமலை வலியுறுத்தல்

/

கவுரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.50,000 ஊதியம் வழங்க வேண்டும் : அண்ணாமலை வலியுறுத்தல்

கவுரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.50,000 ஊதியம் வழங்க வேண்டும் : அண்ணாமலை வலியுறுத்தல்

கவுரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.50,000 ஊதியம் வழங்க வேண்டும் : அண்ணாமலை வலியுறுத்தல்


UPDATED : பிப் 12, 2025 12:00 AM

ADDED : பிப் 12, 2025 11:30 AM

Google News

UPDATED : பிப் 12, 2025 12:00 AM ADDED : பிப் 12, 2025 11:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
அரசு கல்லுாரிகளில் பணிபுரியும் கவுர விரிவுரையாளர்களுக்கு, பல்கலை மானிய குழு பரிந்துரையின்படி, 50,000 ரூபாய் ஊதியம் வழங்கப்பட வேண்டும் என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:


தமிழகம் முழுதும் உள்ள, 171 அரசு கல்லுாரிகளில், 7,360 கவுரவ விரிவுரையாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு ஆண்டுக்கு, 11 மாதம் என்ற ஒப்பந்த அடிப்படையில், தொகுப்பூதியம் வழங்கப்பட்டு வருகிறது. அனைவரும் பல்கலை மானிய குழு பரிந்துரைக்கும் உதவி பேராசிரியர் கல்வி தகுதி பெற்றவர்கள் மட்டுமின்றி, அவர்களில் பலர் சிறப்பு தேர்வு எழுதி, பணி வாய்ப்பையும் பெற்றவர்கள்.

தற்போது, கவுரவ விரிவுரையாளர்கள் எவரையும், பல்கலை மானிய குழு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி நியமிக்கவில்லை என்றும், அதனால், மானிய குழு பரிந்துரைத்துள்ள மாதம், 50,000 ரூபாய் ஊதியம் வழங்க இயலாது என்றும், பொய்யான விளக்கத்தை, தி.மு.க., அரசு அளித்துள்ளது.

இதை கண்டித்து, தமிழகம் முழுதும் கவுரவ விரிவுரையாளர்கள் கவன ஈர்ப்பு போராட்டத்திலும், உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது.

உடனே, அரசு கல்லுாரிகளில் பணிபுரியும் கவுர விரிவுரையாளர்களுக்கு, மானிய குழு பரிந்துரையின்படி, 50,000 ரூபாய் ஊதியம் வழங்கப்பட வேண்டும். கடந்த, 2020 அரசாணையின்படி, புதிய விரிவுரையாளர்கள் பணி நியமனத்தில், ஐந்து ஆண்டுகளுக்கு மேல் கவுரவ விரிவுரையாளர்களாக உள்ள தகுதி வாய்ந்தவர்களை, அரசு நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us