sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

அரசு கல்லூரியில் 1,302 இடங்களில் முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கை 131 காலியிடங்கள் அறிவிப்பு

/

அரசு கல்லூரியில் 1,302 இடங்களில் முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கை 131 காலியிடங்கள் அறிவிப்பு

அரசு கல்லூரியில் 1,302 இடங்களில் முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கை 131 காலியிடங்கள் அறிவிப்பு

அரசு கல்லூரியில் 1,302 இடங்களில் முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கை 131 காலியிடங்கள் அறிவிப்பு


UPDATED : ஜூன் 28, 2024 12:00 AM

ADDED : ஜூன் 28, 2024 07:55 AM

Google News

UPDATED : ஜூன் 28, 2024 12:00 AM ADDED : ஜூன் 28, 2024 07:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:
கோவை அரசு கலைக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம்கட்ட பொது கலந்தாய்வு நிறைவடைந்துள்ள நிலையில், மொத்தம் 1,302 இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 131 காலியிடங்கள் உள்ளன.

அரசு கலைக் கல்லூரியில் துறை வாரியாக பொது கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதில், 1,142 இடங்களில் 80 சதவீத மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து, 291 இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு 24 முதல் 26ம் தேதி வரை நடந்தது. இதில், அறிவியல், வணிகவியல், மொழிப் பாடப் பிரிவுகளில் 160 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

1,433 இடங்களில் 1,302 இடங்களில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 132 காலியிடங்கள் மீதமுள்ளன. இதில், இரண்டாம் சுழற்சியில் தமிழ், ஆங்கிலம், வணிகவியல் மற்றும் இயற்பியல், பாதுகாப்பியல் துறையில் அதிக காலியிடங்கள் உள்ளன.

இதுகுறித்து, கல்லூரி முதல்வர் எழிலி கூறுகையில், முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் மொத்தம் 1,302 இடங்கள் பூர்த்தியாகியுள்ளன. மீதமுள்ள 131 காலியிடங்களுக்கு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் அழைக்கப்பட்டு சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது, என்றார்.






      Dinamalar
      Follow us