வரும் 2ல் லட்சுமி ஹயக்கிரீவர் ஹோமம்பள்ளி; மாணவர்கள் பங்கேற்க அழைப்பு
வரும் 2ல் லட்சுமி ஹயக்கிரீவர் ஹோமம்பள்ளி; மாணவர்கள் பங்கேற்க அழைப்பு
UPDATED : பிப் 28, 2025 12:00 AM
ADDED : பிப் 28, 2025 10:29 AM
கோவை:
அரசு தேர்வு எழுதும் மாணவர்கள் அதிகமதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைவதற்காக லட்சுமி நாரயண வேணுகோபால சுவாமிகோவிலில் ஸ்ரீ லட்சுமி ஹயக்கிரீவர் ஹோமம் மார்ச்.,2 அன்று காலை 10:00 மணிக்கு நடக்கிறது.
கோவை பெரியகடைவீதி கருப்பகவுண்டர் வீதி சந்திப்பில் அமைந்துள்ளது லட்சுமிநாராயண வேணுகோபால சுவாமி கோவில். இங்கு ஸ்ரீ லட்சுமி ஹயக்கிரீவர் ஹோமம் வரும் மார்ச் 2 அன்று நடத்தப்படுகிறது.
இதில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் பள்ளி மாணவ மாணவியர் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று உயர் கல்வியை சிறப்பாக தொடரவும், வாழ்வில் நல்ல நிலையை அடையவும், கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
காலை 10:00 மணிக்கு ஹோமம் துவங்கும். இதில் பங்கேற்பவர்கள் ஹோமத்துக்குதேவையான கொப்பரை, ஹோமக்குச்சி, நெய், பட்டுதுணி ஆகியவற்றை சமர்பித்து வழிபடலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.