UPDATED : ஜன 19, 2009 12:00 AM
ADDED : ஜன 19, 2009 03:52 PM
அ நிறம் | அளவு
உலகில் ரீடெய்ல், டெலிகம்யூனிகேஷன், ஆட்டோமொபைல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒரு லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். இதில் அதிக அளவு வேலை இழந்துள்ளவர்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள்.
அலுமினியம் நிறுவனமான அல்கோவா, மொபைல் போன் நிறுவனமான மோட்டரோலா, ஆட்டோமொபைல் நிறுவனமான ஹோண்டா ஆகிய நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. சர்கியூட் சிட்டி நிறுவனத்திலிருந்துதான் அதிக அளவில் ஆட்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனால் 30 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர்.
அல்கோவா நிறுவனம் உலக அளவில் பணிபுரியும் 13 சதவீத ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி விட்டது. மோட்டரோலா நிறுவனம் மேலும் 4 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பப் போவதாகத் தெரிவித்துள்ளது. ஹோண்டா நிறுவனம் 3,100 பேரையும் பார்கிளேஸ் நிறுவனம் 2,100 பேரையும் போயிங் நிறுவனம் 4,500 பேரையும் ஆட்குறைப்புச் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.
