UPDATED : ஜூலை 27, 2009 12:00 AM
ADDED : ஜூலை 27, 2009 12:52 PM
200910ம் ஆண்டில் தொழில் திறன் பயிற்சி பெற்ற மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் மகளிர்கள், மகளிர் மற்றும் இளைஞர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், படித்த மற்றும் படிக்காத வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் ஆகியோருக்கு டிரைவர் பயிற்சி, கம்ப்யூட்டர், மொபைல் போன், குளிர்சாதனப் பெட்டி பழுதுபார்த்தல், அலங்கார ஆடை வடிவமைத்தல், மருத்துவ ஆய்வுக்கூட தொழில் நுட்ப செவிலியர், ஜே.சி.பி., மற்றும் கிரேன் இயக்குதல் ஆகிய பயிற்சிகள், பன்னாட்டு நிறுவனங்களான ஹூண்டாய், நோக்கியா மற்றும் சில தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சிக் கட்டணம் இலவசம். பயிற்சி முடித்தவுடன் பயிற்சி அளிக்கும் நிறுவனமே வேலைவாய்ப்பு பெறும் வகையில் தொழில் நிறுவனங்களைக் கண்டறிந்து தகுதியான வேலை வாய்ப்பை தர உறுதி அளித்துள்ளது. இப்பயிற்சியில் சேர 5ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்த விருப்பம் உள்ளவர்கள் உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பப் படிவங்களை திட்ட அலுவலர், மகளிர் திட்ட அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாகம், காஞ்சிபுரம் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கலெக்டர்(பொறுப்பு) நம்பிராஜன் தெரிவித்துள்ளார்.
