இன்ஜி., கல்லூரியில் எம்.பி.ஏ., படிப்பு: வழக்கு தள்ளிவைப்பு
இன்ஜி., கல்லூரியில் எம்.பி.ஏ., படிப்பு: வழக்கு தள்ளிவைப்பு
UPDATED : ஜூலை 29, 2009 12:00 AM
ADDED : ஜூலை 29, 2009 12:08 PM
கோவையில் உள்ள தனியார் கல்லூரிகள் நிர்வாக சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், கோவை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் பல பொறியியல் கல்லூரிகளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., வகுப்புகள் நடத்தக் கூடாது என உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டது.
மனுவை நீதிபதி ஜெய்சந்திரன் விசாரித்தார். ஏ.ஐ.சி.டி.இ., சார்பில் வக்கீல் என்.முரளிகுமரன் ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் பெற்ற படிப்புகளைத் தவிர வேறு வகுப்புகளை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தக் கூடாது என வாதாடினார்.
ஏ.ஐ.சி.டி.இ., தாக்கல் செய்த பதில் மனுவில், தொலைதூர கல்வி கவுன்சில் மற்றும் யு.ஜி.சி., ஏ.ஐ.சி.டி.இ., இணைக் குழுவின் ஒப்புதல் இல்லமல், கோவை அண்ணா பல்கலைக்கழகம் தொலைதூர கல்வி நடத்தி, பட்டங்களை வழங்குகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான உத்தரவை, தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஜெய்சந்திரன் தள்ளிவைத்தார்.
