ஆயிரம் போலீஸ் பணியிடங்களுக்கு 1.90 லட்சம் பேர் விண்ணப்பம்
ஆயிரம் போலீஸ் பணியிடங்களுக்கு 1.90 லட்சம் பேர் விண்ணப்பம்
UPDATED : அக் 11, 2009 12:00 AM
ADDED : அக் 11, 2009 09:44 AM
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத் தலைவர் ஏ.டி.ஜி.பி., டி.ராஜேந்திரன் தலைமையில் நடந்த கூட்டத்தில், தென்மண்டல ஐ.ஜி., கிருஷ்ணமூர்த்தி, டி.ஐ.ஜி.,க்கள், எஸ்.பி.,க் கள் பங்கேற்றனர்.
நமது நிருபரிடம் ஏ.டி.ஜி.பி., ராஜேந்திரன் கூறியதாவது:
4000 கிரேடு 2 காலி பணியிடங்களுக்கு அக்., 25ல் எழுத்துத் தேர்வு நடக்கிறது. 1.90 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தென்மாவட்டங்களில் 72 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். அக்.,20க்குள் அழைப்பு கடிதம் கிடைக் காதவர்கள் அந்தந்த மாவட்ட எஸ்.பி.,யிடம் பெற்றுக் கொள்ளலாம். எவ்வித புகாருக்கும் இடமின்றி தேர்வு நடத்தப்படும். அனைத்து நடவடிக்கைகளும் வீடியோவில் பதிவு செய்யப்படும் என்றார்.
ஐ.ஜி., கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்த மாதம் உடல் தகுதி தேர்வு நடக்கிறது. மாவட்ட தலைநகரங்களில் எஸ்.பி.,க்களின் நேரடி கண்காணிப்பில் தேர்வு நடக்கிறது. ஐ.ஜி., டி.ஐ.ஜி.,க்கள் தலைமையில் சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுஉள்ளது என்றார்.
