இடியும் நிலையில் அங்கன்வாடி கட்டடம்: பீதியில் குழந்தைகள்
இடியும் நிலையில் அங்கன்வாடி கட்டடம்: பீதியில் குழந்தைகள்
UPDATED : அக் 13, 2009 12:00 AM
ADDED : அக் 13, 2009 04:40 PM
அ நிறம் | அளவு
முதுகுளத்தூர் ஒன்றியம் மணலூர் அங்கன்வாடி மூலம் 25 குழந்தைகள் பயனடைகின்றனர். இங்குள்ள கட்டடம் 50 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயன்பெறும் அளவு விரிவானதாக கட்டப்பட்டுள்ளது.ஆனால் கட்டட சுவர்கள் பெயர்ந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது.
இதனால் அங்கன்வாடிக்கு தங்களது குழந்தைகளை அனுப்ப பெற்றோர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். கட்டடத்தில் குழந்தைகளுக்கு சமையல், கற்பித்தல் உட்பட அனைத்தும் பொறுப்பாளரால் கவனிக்கப்பட்டு வரும் நிலையில், கட்டட சுவர்கள்அருகே குழந்தைகள் விளையாடும் போது யாதும் ஆபத்து நேர்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் கிராமத்தினர் உள்ளனர். சம்மந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டடத்தை அகற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும்.
