UPDATED : ஏப் 08, 2026 05:46 PM
ADDED : ஏப் 08, 2026 05:47 PM
சிவகங்கை:
சிவகங்கை வழக்கறிஞர்கள் சங்கம், நியூசெஞ்சுரி புத்தக நிலையம் இணைந்து இரண்டாம் ஆண்டு புத்தகக் கண்காட்சியை சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் நடத்தியது. முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி கே. அறிவொளி திறந்து வைத்தார்.
கூடுதல் மாவட்ட நீதிபதி பார்த்தசாரதி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். புத்தகங்களை நகரம்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் முரளிதரன், பாகனேரி ஊராட்சி முன்னாள் தலைவர் சுவாமிநாதன் பெற்றுக் கொண்டனர்.
வழக்கறிஞர்கள் சங்கத்தலைவர் ஜானகிராமன் தலைமை வகித்தார்.
ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் கிருஷ்ணன் வரவேற்றார். மூத்த வழக்கறிஞர்கள் மோகனசுந்தரம், இளங்கோவன், அழகர்சாமி, சிவக்குமார், வழக்கறிஞர் சங்கச்செயலர் சித்திரைச்சாமி, பொருளாளர் தீபன்சக்கரவர்த்தி வாழ்த்தி பேசினர். வழக்கறிஞர் சங்க இணை செயலாளர் ரவிக்குமார் நன்றி கூறினார்.

