UPDATED : ஏப் 07, 2026 11:06 AM
ADDED : ஏப் 07, 2026 11:08 AM
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டத்தில் பெண்கள் மற்றும் இளைஞர்களிடம் வேலை தருவதாக கூறி ரூ.1.90 லட்சம் வரை மோசடி செய்தவர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வைகை வடகரை பகுதியை சேர்ந்தவர் 25வது இளைஞர். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு விளம்பரம் பார்த்துள்ளார்.
அதில் பணம் முதலீடு செய்தால் ஒரு வாரத்தில் இரண்டு மடங்காக லாபம் கிடைக்கும் என்று இருந்துள்ளது. அதில் உள்ள எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அவர் பேசியதை நம்பிய இளைஞர் அவர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.10 ஆயிரம் அனுப்பியுள்ளார். பணத்தை பெற்ற அந்த நபர் லாபத்தொகை கொடுக்காமல் இளைஞரை ஏமாற்றினார்.
இதே போல் கடந்த மார்ச் 25ல் இளையான்குடி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 19 வயது பெண்ணிற்கு தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து பேசுவது போல் பேசி கடன் தருவதாக ரூ.52 ஆயிரம் மோசடி செய்துள்ளனர்.
தேவகோட்டை அண்ணாநகரை சேர்ந்த 37 வயது பெண்ணிடமும் தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து பேசுவதுபோல் பேசி கடன் தருவதாக ரூ.89 ஆயிரத்து 125 மோசடி செய்துள்ளனர்.
திருப்புவனம் அகரம் பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞரிடம் ஏர்போர்ட்டில் வேலை தருவதாக கூறி ரூ.42 ஆயிரம் மோசடி செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் சிவகங்கை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

