UPDATED : ஜன 25, 2025 12:00 AM
ADDED : ஜன 25, 2025 11:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை:
மத்திய அரசின் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகைத் திட்டத்தின் (என்.எம்.எம்.எஸ்.,) கீழ் அரசு, அரசு உதவி பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
ஒன்பது முதல் பிளஸ் 2 வரை மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் இத்திட்டத்துக்கு, ஆண்டுதோறும் தேர்வு நடத்தப்படுகிறது. நடப்பு 2025ம் ஆண்டுக்கான தேர்வு, வரும், பிப்., 22ம் தேதி நடக்கிறது. கூடுதல் தகவல்களை, www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.