sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

10ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கல்

/

10ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கல்

10ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கல்

10ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கல்


UPDATED : அக் 29, 2014 12:00 AM

ADDED : அக் 29, 2014 12:35 PM

Google News

UPDATED : அக் 29, 2014 12:00 AM ADDED : அக் 29, 2014 12:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்பகோணம்: கும்பகோணம் கல்வி மாவட்ட அலுவலர் அண்ணாபிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த செப்டம்பர், 25 முதல் அக்டோபர், 4ம் தேதி வரை எஸ்.எஸ்.எல்.ஸி., துணைத் தேர்வெழுதிய தனித் தேர்வர்களுக்கு மதிப்பெண்கள் சான்றிதழ்கள், தேர்வு எழுதிய மையங்களில் வழங்கப்பட்டு வருகின்றன.

இதனை நேரில் சென்று பெற்றுக்கொள்ள வேண்டும். இந்த தேர்வு முடிவுகள், இணையதளத்தில் வெளியிடப்படமாட்டாது. மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள், அரசு தேர்வுத்துறை சேவை மையங்கள் மூலம் இன்று, (29ம் தேதி) வரை நேரில் சென்று மறு கூட்டல் கட்டணத்துடன் கூடுதலாக ஆன்லைன் பதிவு கட்டணமாக, 50 ரூபாயை செலுத்தி பதிவுசெய்து கொள்ள வேண்டும்.

மறு கூட்டலுக்கான கட்டணமாக, இருதாள் கொண்ட ஒவ்வொரு பாடத்திற்கும் 305 ரூபாயும், ஒரு தாள் கொண்ட ஒவ்வொரு பாடத்திற்கும் 205 ரூபாயும் செலுத்த வேண்டும்.

மார்ச், ஏப்ரல், 2015ல் நடைபெறவுள்ள எஸ்.எஸ். எல்.ஸி., பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், இன்று முதல் அடுத்த மாதம், 7ம் வரை கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வுத்துறை சேவை மையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பங்களை, ஆன்லைனில் பதிவுசெய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us