sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

நாளை டி.என்.பி.எஸ்.சி., தேர்வு சேலத்தில் 14,291 பேருக்கு அனுமதி

/

நாளை டி.என்.பி.எஸ்.சி., தேர்வு சேலத்தில் 14,291 பேருக்கு அனுமதி

நாளை டி.என்.பி.எஸ்.சி., தேர்வு சேலத்தில் 14,291 பேருக்கு அனுமதி

நாளை டி.என்.பி.எஸ்.சி., தேர்வு சேலத்தில் 14,291 பேருக்கு அனுமதி


UPDATED : ஜூன் 14, 2025 12:00 AM

ADDED : ஜூன் 14, 2025 11:44 AM

Google News

UPDATED : ஜூன் 14, 2025 12:00 AM ADDED : ஜூன் 14, 2025 11:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்:
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் - 1, 1ஏ தேர்வு முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம், சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

கலெக்டர் பிருந்தா-தேவி தலைமை வகித்து பேசியதாவது:

குரூப் 1, 1ஏ தேர்வு, ஜூன், 15ல்(நாளை) நடக்கிறது. சேலம் மாவட்டத்தில், 14,291 பேர், இத்தேர்வை எழுதுகின்றனர். சேலம், சேலம் மேற்கு, தெற்கு, ஆத்துார் ஆகிய மையங்களில், 41 பள்ளி, கல்லுாரிகளில் அமைக்கப்பட்டுள்ள, 51 கூடங்களில், காலை, 9:30 முதல் மதியம், 12:30 மணி வரை தேர்வு நடக்கும். காலை, 8:30 மணி முதல், தேர்வு கூடத்தில் அனுமதிக்கப்படுவதால், உரிய நேரத்துக்குள் தேர்வர்கள் வர வேண்டும். 9:00 மணி வரை மட்டும் அனுமதி உண்டு. தாமதமாக வருவதை தேர்வர்கள் தவிர்க்க வேண்டும்.

தேர்வுக்கு, 14 நடமாடும் கண்காணிப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளது. தேர்வாணைய விதிமுறைக்கு ஏற்ப, வினாத்தாள், விடைத்தாள் வழங்குதல், விடைத்தாள் சேகரித்தல், தேர்வு எழுதும் நேரம், தேர்வு எழுதுவோரின் நுழைவுச்சீட்டு ஆகியவற்றை சரிபார்த்தல் போன்ற பல்வேறு பணிகள், முறையாக மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வு மையங்களுக்கு வந்து செல்ல வசதியாக தேர்வர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். தேர்வு நடக்கும் மையங்கள், வீடியோ பதிவு செய்யப்படும். அடிப்படை, பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us