UPDATED : பிப் 01, 2026 06:52 PM
ADDED : பிப் 01, 2026 06:53 PM
தேனி: பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடந்த முதல்வர் திறனறித்தேர்வை 1720 மாணவர்கள் எழுதினர்.
தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு முதல்வர் திறனறித்தேர்வு நடத்தப்படுகிறது. மதிப்பெண் அடிப்படையில் மாநில அளவில் ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். தேர்வாகும் மாணவர்களுக்கு பிளஸ் 1 முதல் இளநிலை பட்டம் பெறும் வரை சுமார் 5 ஆண்டுகளுக்கு ஆண்டிற்கு தலா ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
தேர்வு எழுத 1859 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். நேற்று தேனி, பெரியகுளம், மயிலாடும்பாறை, ஆண்டிபட்டி, கம்பம், சின்னமனுார் ஆகிய பகுதிகளில் உள்ள மையங்களில் காலை, மதியம் தேர்வு நடந்தது. தேர்வு ஓ.எம்.ஆர்., சீட் பயன்படுத்தி நடந்தது. 1720 பேர் பங்கேற்றனர். 139 பேர் ஆப்சென்ட் ஆகினர்.

