sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

மாணவர்களுக்கு வரும் 22ல் பேச்சு போட்டி

/

மாணவர்களுக்கு வரும் 22ல் பேச்சு போட்டி

மாணவர்களுக்கு வரும் 22ல் பேச்சு போட்டி

மாணவர்களுக்கு வரும் 22ல் பேச்சு போட்டி


UPDATED : அக் 19, 2024 12:00 AM

ADDED : அக் 19, 2024 10:03 AM

Google News

UPDATED : அக் 19, 2024 12:00 AM ADDED : அக் 19, 2024 10:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், சென்னை மாவட்ட பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான, காந்தி பிறந்த நாள் பேச்சுப் போட்டி, வரும், 22ம் தேதி காலை 9:00 மணிக்கு நடத்தப்பட உள்ளது.

வடசென்னை மாணவர்களுக்கு, வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் கலைக்கல்லுாரி, மத்திய சென்னை மாணவர்களுக்கு, சேப்பாக்கம் மாநிலக்கல்லுாரி, தென் சென்னை மாணவர்களுக்கு ராணி மேரி கல்லுாரி ஆகிய இடங்களில், போட்டிகள் நடக்க உள்ளன.

போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், அவர்களின் தலைமை ஆசிரியர், முதல்வரின் ஒப்புதலுடன் பங்கேற்க வேண்டும். போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, முதல் பரிசாக, 5,000 ரூபாய், இரண்டாம் பரிசாக 3,000 ரூபாய், மூன்றாம் பரிசாக 2,000 ரூபாய் வழங்கப்படும்.

அரசுப்பள்ளி மாணவர்கள் இருவருக்கு சிறப்பு பரிசாக, தலா 2,000 ரூபாய் வழங்கப்படும். வெற்றி பெறும் அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.






      Dinamalar
      Follow us