ஈஸ்வரி இன்ஜினியரிங் கல்லூரியில் 25 பட்டமளிப்பு விழா
ஈஸ்வரி இன்ஜினியரிங் கல்லூரியில் 25 பட்டமளிப்பு விழா
UPDATED : மே 05, 2025 12:00 AM
ADDED : மே 05, 2025 08:31 AM

சென்னை:
சென்னை ராமாபுரத்தில் உள்ள எஸ்.ஆர்.எம் ஈஸ்வரி பொறியியல் கல்லூரியின் 25வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
இந்த விழா எஸ் ஆர் எம் குழுமத்தின் தலைவர் சிவக்குமார் தலைமை ஏற்க இணைத்தலைவராகிய நிரஞ்சன் மேற்பார்வையில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக ஸ்ட்ராடின்பினிட்டி இன்க் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை அதிகாரி மேலும் இந்திய அரசின் கல்வி அமைச்சகம் மற்றும் ஏஐசிடிஇ முதலீட்டாளர்கள் குழுவின் துணைத்தலைவர் பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு மாணவ மாணவிகள் இடையே சிறப்புரையாற்றினார். பின்பு 2022 - 24 ஆம் ஆண்டு கல்வியாண்டில் மொத்தம் 2013 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களையும் பதக்கங்களையும் வழங்கினார்.
விழாவில் பாலசுப்பிரமணிய பேசுகையில், மாணவர்கள் கலாசார ரீதியாக பொருந்தக்கூடியவர்களாகவும், சமூக பொறுப்பு உணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியம் என வலியுறுத்தினார். உலகம் மாறிக்கொண்டிருக்கும் நிலையில், மாணவர்கள் தேசிய வளர்ச்சியை தங்களது முதன்மை இலக்காகக் கொள்ள வேண்டும் என்றார்.இந்த பட்டமளிப்பு விழாவில் ஈஸ்வரி இன்ஜினியரிங் கல்லூரியின் முதல்வர் தேவசுந்தரி மற்றும் கல்லூரி பேராசிரியர்களும் ஆசிரியர்களும் மாணவ மாணவிகளின் பெற்றோர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

