3 பாடங்களில் நடந்த அடைவுத்தேர்வை 981 மாணவர்கள் எழுதினர்
3 பாடங்களில் நடந்த அடைவுத்தேர்வை 981 மாணவர்கள் எழுதினர்
UPDATED : ஆக 27, 2014 12:00 AM
ADDED : ஆக 27, 2014 12:11 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம், பரமக்குடி, திருவாடானை, கமுதி, மண்டபம் உள்பட 11 ஒன்றியங்களில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தலா மூன்று பள்ளிகளில் 9ம் வகுப்பு மாணவர்கள் தலா 30 பேர் அடைவுத்தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டனர். தமிழ், ஆங்கிலம், கணிதம் பாடங்களில் நேற்று(ஆக. 26) நடந்த அடைவுத்தேர்வை 981 மாணவர்கள் எழுதினர்.
முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்கண்ணு, மாவட்டக்கல்வி அலுவலர்கள் சாந்தி, பழனியாண்டி, மாவட்ட ஆசிரியர் கல்வி நிறுவன முதல்வர் லட்சுமணன், அனைவருக்கும் கல்வி இயக்க உதவி திட்ட அலுவலர் சுரேஷ்குமார், அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்ட உதவி அலுவலர் ஜெயச்சந்திரன் ஆகியோர் தேர்வை கண்காணித்தனர்.
