sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

ராஜிவ்காந்தி கால்நடை மருத்துவ கல்லுாரியில் 3 நாள் சர்வதேச கருத்தரங்கம் துவங்கியது

/

ராஜிவ்காந்தி கால்நடை மருத்துவ கல்லுாரியில் 3 நாள் சர்வதேச கருத்தரங்கம் துவங்கியது

ராஜிவ்காந்தி கால்நடை மருத்துவ கல்லுாரியில் 3 நாள் சர்வதேச கருத்தரங்கம் துவங்கியது

ராஜிவ்காந்தி கால்நடை மருத்துவ கல்லுாரியில் 3 நாள் சர்வதேச கருத்தரங்கம் துவங்கியது


UPDATED : பிப் 26, 2026 03:13 PM

ADDED : பிப் 26, 2026 03:18 PM

Google News

UPDATED : பிப் 26, 2026 03:13 PM ADDED : பிப் 26, 2026 03:18 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி:
புதுச்சேரி ராஜிவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்லுாரி சார்பில், விலங்கு இயல்பியலின் உருவெடுக்கும் கோட்பாடுகள், புதுமையையும் நிலைத்திரு தன்மையையும் மறு உருவாக்குதல் என்ற தலைப்பிலான கருத்தரங்கம் நடந்தது.

ராஜிவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்லுாரி மற்றும் சொசைட்டி ஆப் அனிமல் பிசியாலஜிஸ்ட்ஸ் ஆப் இந்தியா ஆகியன இணைந்து நடத்தும் மூன்று நாள் சர்வவேத அளவிலான கருத்தரங்கின் துவக்க விழா, அப்துல் கலாம் கலையரங்கில் நேற்று நடந்தது.

கருத்தரங்கின் அமைப்பு செயலாளர் நைனன் ஜேக்கப் வரவேற்றார். அரசு செயலர் யாசின் முகமது சவுத்ரி, கருத்தரங்கினை துவக்கி வைத்து பேசினார்.

ஆராய்ச்சி நிறுவனத்தின் டீன் முருகவேல், கால்நடை பராமரிப்பு மற்றும் நலத்துறை இயக்குனர் லதா மங்கேஷ்கர் வாழ்த்தி பேசினார்.

டாக்டர் மதன், சங்க தலைவர் ரஸ்தோகி ஆகியோர் நோக்கவுரையாற்றினர்.

பொதுச் செயலாளர் சைலேஷ் இங்கோல் மற்றும் நிர்வாகிகள் இத்துறையின் சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கினர். மாணவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர். டாக்டர் நிகில் குமார் தேஜ் நன்றி கூறினார்.

நாளை 27ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த சர்வதேச கருத்தரங்கில் உலகின் பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்களிலிருந்து வந்த 100க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் பங்கேற்க உள்ளனர்.






      Dinamalar
      Follow us