UPDATED : ஏப் 25, 2026 11:37 AM
ADDED : ஏப் 25, 2026 11:40 AM
பாகூர்:
குருவிநத்தம் பாரதிதாசன் அரசு உயர்நிலைப் பள்ளியில், அறிந்ததும் அறியாததும் பொது அறிவு நிகழ்ச்சி நடந்தது.
தலைமையாசிரியர் குமாரராசு தலைமை தாங்கினார். தொடக்கப் பள்ளி ஆசிரியர் ரேவதி வரவேற்றார். ஆசிரியர் வெற்றிவேல் நோக்கவுரையாற்றினார். ஆசிரியர்கள் சுகந்தி, அமலா வாழ்த்தி பேசினர்.
சிறப்பு விருந்தினரான ஓய்வு பெற்ற வரலாற்று, விரிவுரையாளர் சேலியமேடு சபாபதி, 'அறிந்ததும் அறியாததும்' என்ற தலைப்பில், தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட பாடங்களையும், பொது அறிவு தொடர்பாக வினாடி வினா நிகழ்ச்சியை நடத்தினார்.
இதில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று வினாக்களுக்கு பதில் கூறினர். பாரதி, பாரதிதாசன், நேரு என மூன்று குழுக்களாக மாணவர்கள் போட்டிகளில் பங்கு கொண்டனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு எழுதுபொருட்கள் மற்றும் கணிதம் பெட்டி பரிசளிக்கப்பட்டன. ஆசிரியர் குபேரன் நன்றி கூறினார்.

