தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/380 பேருக்கு கனவு ஆசிரியர் விருது

380 பேருக்கு கனவு ஆசிரியர் விருது

380 பேருக்கு கனவு ஆசிரியர் விருது


UPDATED : நவ 25, 2023 12:00 AM

ADDED : நவ 25, 2023 11:01 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 25, 2023 12:00 AM ADDED : நவ 25, 2023 11:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
அரசு பள்ளி ஆசிரியர்கள் 380 பேருக்கு, கனவு ஆசிரியர் விருது வழங்கப்படும் என பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது.தமிழக பள்ளிக்கல்வி துறை சார்பில், ஆண்டுதோறும், டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. இதைத் தவிர, அரசு பள்ளிகளில் கற்பித்தலில் சிறந்த ஆசிரியர்களுக்கு, தனியாக கனவு ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கு ஆன்லைன் வழி தேர்வு நடந்தது. அதில், 8,096 பேர் பங்கேற்றனர். அவர்களில், 1,536 பேர் தேர்வாகி, அடுத்த கட்ட தேர்வு எழுதினர்.அவர்களில், 964 பேர் தேர்வாகி, வகுப்பறை செயல்பாடுகளை நேரில் விளக்கினர். இந்த மூன்று கட்ட தெரிவு முறையில், அதிக மதிப்பெண் பெற்ற, 255 ஆசிரியைகள் உட்பட, 380 பேர், கனவு ஆசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக, பள்ளிக்கல்வி துறை அறிவித்துஉள்ளது.தேர்வானவர்களில், 162 பேர் இடைநிலை, 177 பேர் பட்டதாரி, 41 பேர் முதுநிலை ஆசிரியர்கள். டாப் மதிப்பெண் பெற்ற 55 பேர், வெளிநாட்டு கல்வி சுற்றுலாவுக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us