sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

43,000 போலி பட்டங்கள்: தனியார் பல்கலை மோசடி

/

43,000 போலி பட்டங்கள்: தனியார் பல்கலை மோசடி

43,000 போலி பட்டங்கள்: தனியார் பல்கலை மோசடி

43,000 போலி பட்டங்கள்: தனியார் பல்கலை மோசடி


UPDATED : ஜூலை 14, 2024 12:00 AM

ADDED : ஜூலை 14, 2024 08:41 PM

Google News

UPDATED : ஜூலை 14, 2024 12:00 AM ADDED : ஜூலை 14, 2024 08:41 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜெய்ப்பூர்:
ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தில், 2013 முதல், ஓம் பிரகாஷ் ஜோகிந்தர் சிங் என்ற பெயரில் பல்கலை செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலையில், 2016ல் 100 இடங்களுக்கு மட்டுமே உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளர் படிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில், 2022 உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளர் தேர்வுக்கு, ஓம் பிரகாஷ் ஜோகிந்தர் சிங் பல்கலையைச் சேர்ந்த 1,300 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இந்த விவகாரம், ஏப்., 8ம் தேதி வெளிச்சத்துக்கு வந்ததை அடுத்து, போலீசார் விசாரிக்க துவங்கினர்.

சமீபத்தில் இந்த பல்கலை நிறுவனர் ஜோகிந்தர் சிங் தலாலை, போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:


பிஎச்.டி., உட்பட பல்வேறு படிப்புகளில் 43,409 போலி பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. 30க்கும் குறைவான ஊழியர்களுடன் பல்கலையை நடத்துவது சாத்தியமில்லை.

உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளர் தேர்வு, அரசு பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்காக, விண்ணப்ப தாரர்களுக்கு பின்தேதியிட்ட பட்டங்களை, இந்த பல்கலை வழங்கி உள்ளது. இதுகுறித்து தீவிர விசாரணை நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us