sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பத்தாம் வகுப்பில் தேர்ச்சி; கடந்த ஆண்டை விட 2.25 சதவீதம் அதிகம்

/

பத்தாம் வகுப்பில் தேர்ச்சி; கடந்த ஆண்டை விட 2.25 சதவீதம் அதிகம்

பத்தாம் வகுப்பில் தேர்ச்சி; கடந்த ஆண்டை விட 2.25 சதவீதம் அதிகம்

பத்தாம் வகுப்பில் தேர்ச்சி; கடந்த ஆண்டை விட 2.25 சதவீதம் அதிகம்


UPDATED : மே 17, 2025 12:00 AM

ADDED : மே 17, 2025 01:30 PM

Google News

UPDATED : மே 17, 2025 12:00 AM ADDED : மே 17, 2025 01:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளுக்கான 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள், கடந்த மார்ச், 28 முதல் ஏப்., 15 வரை நடந்தன. இதில், 4,930 உயர்நிலை, 7,555 மேல்நிலைப் பள்ளிகள் என, மொத்தம் 12,485 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.

அதாவது, 4 லட்சத்து, 35,119 மாணவியரும், 4 லட்சத்து, 36,120 மாணவர்களும் பங்கேற்றனர். அவர்களில், 4 லட்சத்து, 78 மாணவர்கள், 4 லட்சத்து, 17,183 மாணவியர் என, 8 லட்சத்து, 17,261 பேர் தேர்ச்சி பெற்று, 93.80 சதவீதத்தை பதிவு செய்துள்ளனர்.

இது, கடந்த ஆண்டை விட, 2.25 சதவீதம் அதிகம். வழக்கம் போல, மாணவர்களை விட மாணவியர், 4.14 சதவீதம் பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்ச்சி அடைந்தவர்களில், ஆண்கள் பள்ளிகளை விட, பெண்கள் மற்றும் இருபாலர் பள்ளிகளை சேர்ந்தவர்களே அதிகம். அரசு பள்ளிகளை விட, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாற்றுத்திறனாளிகள்


தமிழகத்தில், 12,290 மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வெழுதியதில், 11,409 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 237 சிறைவாசிகளில், 230 பேர் தேர்ச்சி பெற்றனர். 23,769 தனித்தேர்வர்களில், 9,616 பேர் தேர்ச்சி பெற்றுஉள்ளனர்.

கசக்கும் தமிழ்


பொதுவாக மொழிப்பாடங்களில், முழு மதிப்பெண் பெறுவது கடினம். இந்தாண்டு 10ம் வகுப்பு தேர்வில், 346 மாணவர்கள் ஆங்கில பாடத்தில் முழு மதிப்பெண் பெற்று உள்ள நிலையில், எட்டு மாணவர்கள் மட்டுமே, தமிழில் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.

இந்தாண்டு முதல், தமிழ் பாடத்தில் உள்ள அலகுகள் குறைக்கப்படுவதாக கூறப்படும் நிலையில், தமிழகத்தில் உள்ள மாணவர்கள், தமிழில் பின்தங்குவது குறித்து, பள்ளிக் கல்வி துறை ஆராய வேண்டியது அவசியம்.

துணைத்தேர்வு


பத்தாம் வகுப்பு தேர்வில், 53,978 பேர் தேர்ச்சி பெறவில்லை; 15,652 மாணவர்கள் பங்கேற்கவில்லை. தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வில் பங்கேற்காத மாணவர்கள், வரும் ஜூலை 4ம் தேதி முதல் நடக்க உள்ள துணைத்தேர்வுகளை எழுதலாம்.

அதில் தேர்ச்சி பெற்று, இந்த கல்வியாண்டிலேயே பிளஸ் 1ல் சேரலாம். படித்த பள்ளி வாயிலாகவும், அரசு தேர்வுகள் இயக்கக சேவை மையங்களிலும், வரும், 22ம் தேதி முதல் ஜூன் 6 வரை விண்ணப்பிக்கலாம்.






      Dinamalar
      Follow us