sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

ஆதரவற்ற மாணவியின் கல்லுாரி கனவு; அதிகாரிகள் முயற்சியால் நனவானது

/

ஆதரவற்ற மாணவியின் கல்லுாரி கனவு; அதிகாரிகள் முயற்சியால் நனவானது

ஆதரவற்ற மாணவியின் கல்லுாரி கனவு; அதிகாரிகள் முயற்சியால் நனவானது

ஆதரவற்ற மாணவியின் கல்லுாரி கனவு; அதிகாரிகள் முயற்சியால் நனவானது


UPDATED : ஜூன் 21, 2025 12:00 AM

ADDED : ஜூன் 21, 2025 10:00 AM

Google News

UPDATED : ஜூன் 21, 2025 12:00 AM ADDED : ஜூன் 21, 2025 10:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி :
பொள்ளாச்சியில் ஆதரவற்ற கல்லுாரி மாணவியின் கல்லுாரி கனவை நனவாக்க, முயற்சி எடுத்த நகராட்சி கமிஷனர், கல்லுாரி நிர்வாகத்துக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி அருகே, வால்பாறை துாய இருதய மேல்நிலைப்பள்ளியில் பொருளியல் பிரிவு படித்த ஆதரவற்ற மாணவி ேஷாபவள்ளி. பிளஸ் 2ல், 417 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். கல்லுாரியில் கட்டணம் செலுத்தி படிக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

நான் முதல்வன் திட்டத்தின் ஒரு பகுதியான, கல்லுாரி கனவு பிரிவின் துணை கலெக்டர் சுபாஷ், மாணவியின் நிலை குறித்து, பொள்ளாச்சி நகராட்சி கமிஷனர் கணேசனிடம் தெரிவித்தார்.

கமிஷனர், மாணவியுடன் பொள்ளாச்சி பி.ஏ., பாலிடெக்னிக் கல்லுாரிக்கு சென்றார். அங்கு, டிப்ளமோ மின்னணு மற்றும் தொடர்பியல் பொறியியல் பாடப்பிரிவை மாணவி தேர்ந்தெடுத்தார்.

அப்போது கல்லுாரி தாளாளர் அப்புக்குட்டி, கல்லுாரியில் கட்டணமின்றி படிக்கவும், விடுதி வசதியும் ஏற்படுத்தி கொடுத்தார். ஆதரவற்ற மாணவியின் கல்லுாரி கனவை நனவாக்கிய கமிஷனரின் முயற்சிக்கும், கல்லுாரி நிர்வாகத்துக்கும் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

துணை கலெக்டர் சுபாஷ் கூறுகையில், மாவட்டத்தில், 100 சதவீதம் உயர் கல்வி பயில வைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதில், உயர்கல்வி பயிலாதவர்களை கண்டறிந்து கல்லுாரியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

கோவை மாவட்டத்தில் உள்ள அரசுத்துறை அதிகாரிகள் உதவிக்கரம்நீட்டுவதால், ஆதரவற்ற, பணம் கட்ட முடியாமல் தவிக்கும் மாணவர்களை கல்லுாரியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதில், நகராட்சி கமிஷனர், ஆதரவற்ற மாணவிக்கு கல்லுாரி மற்றும் விடுதி கட்டணம் இலவசமாக வழங்கி படிக்க வாய்ப்பு வழங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.






      Dinamalar
      Follow us