sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

ஏ.பி.வி.பி., வெற்றி தேசமே முதன்மை என்ற நம்பிக்கையின் பிரதிபலிப்பு: அமைச்சர் அமித் ஷா

/

ஏ.பி.வி.பி., வெற்றி தேசமே முதன்மை என்ற நம்பிக்கையின் பிரதிபலிப்பு: அமைச்சர் அமித் ஷா

ஏ.பி.வி.பி., வெற்றி தேசமே முதன்மை என்ற நம்பிக்கையின் பிரதிபலிப்பு: அமைச்சர் அமித் ஷா

ஏ.பி.வி.பி., வெற்றி தேசமே முதன்மை என்ற நம்பிக்கையின் பிரதிபலிப்பு: அமைச்சர் அமித் ஷா


UPDATED : செப் 20, 2025 12:00 AM

ADDED : செப் 20, 2025 08:38 AM

Google News

UPDATED : செப் 20, 2025 12:00 AM ADDED : செப் 20, 2025 08:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:
டில்லி பல்கலை. மாணவர் சங்க தேர்தலில் ஏபிவிபி பெற்ற வெற்றியானது, தேசமே முதன்மையானது என இளைஞர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையின் பிரதிபலிப்பு என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறி உள்ளார்.

டில்லி பல்கலை மாணவர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவி, செயலாளர், இணை செயலாளர் உள்ளிட்ட முக்கிய பல பொறுப்புகளில் பா.ஜ., மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி., வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களின் வெற்றியை தொண்டர்கள், ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் ஏ.பி.வி.பி., வெற்றி குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா தமது எக்ஸ் வலைதள பதிவில் கூறி உள்ளதாவது:


டில்லி பல்கலை. மாணவர் சங்க தேர்தலில் ஏபிவிபியின் சார்பில் மகத்தான வெற்றியை பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். இந்த வெற்றியானது தேசம் தான் முதலில் என்ற சித்தாந்தத்தின் இளைஞர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையின் பிரதிபலிப்பு ஆகும். இந்த வெற்றி மாணவர் சக்தியை, தேசிய சக்தியாக மாற்றும் பயணத்தை வேகப்படுத்தும்.

இவ்வாறு அமைச்சர் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.

பா.ஜ., தலைவர் நட்டா தமது எக்ஸ் வலைதள பதிவில், சுவாமி விவேகானந்தர் கொள்கைகளால் வழிநடத்தப்படும் ஏ.பி.வி.பி., எப்போதுமே இளைஞர்களை தேசியம் என்ற உணர்வுடன், தன்னமல்லமற்ற சேவையுடன் ஊக்குவித்து வருகிறது. இந்த வெற்றி தேசமே முதலில் என்பதை காட்டுகிறது என்று கூறி உள்ளார்.







      Dinamalar
      Follow us