UPDATED : ஜன 17, 2026 11:54 AM
ADDED : ஜன 17, 2026 11:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:
பவானி தாலுகா வரதநல்லூர் கிராமத்தில் வயல் விழா நடந்தது. வேளாண் உதவி இயக்குனர் கனிமொழி தலைமை வகித்தார்.
கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை கழக மாணவியர் தென்னை மரங்களுக்கு டானிக் பயன்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் செய்து காண்பித்தனர். தென்னை மரங்களின் ஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சியை அதிகரிக்க, தென்னை டானிக் பயன்படுத்தும் முறை, அதன் நன்மைகள் பற்றி விவசாயிகளுக்கு விளக்கினார்.
தென்னை பயன்படுத்துவதன் மூலம் பூச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுதல், காய் பிடிப்பு அதிகரிப்பு, உற்பத்தி உயர்வு போன்றவை குறித்து விளக்கம் அளித்தனர்.
விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர். சென்னை சாகுபடி விவசாயிகள் பங்கேற்றனர்.

