எய்ம்ஸ் கட்டுமான பணி முடியவில்லை: அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்
எய்ம்ஸ் கட்டுமான பணி முடியவில்லை: அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்
UPDATED : பிப் 11, 2026 04:52 PM
ADDED : பிப் 11, 2026 04:53 PM
சென்னை:
“மதுரையில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனை, கட்டுமான பணிகள் முடியும் தருவாயில் உள்ளதாக சொல்ல முடியாது”, என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், எட்டு கோடி ரூபாய் மதிப்பிலான, கேத்லேப் கருவி மையத்தை அமைச்சர் சுப்பிரமணியன் மக்கள் பயன்பாட்டிற்கு நேற்று திறந்து வைத்தார் அப்போது அவர் அளித்த பேட்டி:
விரைவில், கடலுார், நீலகிரி, திருவள்ளுர், திருவண்ணாமலை, ராமநாதபுரம் என, ஐந்து இடங்களில், புதிய 'கேத்லேப்' அமைக்கப்படும். மாரடைப்பு ஏற்பட்ட நோயாளிகளுக்கு, கேத்லேப் வாயிலாக அடைப்புகள் உடனடியாக அகற்றப்பட்டு, ரத்த ஓட்டம் சீராக்கப்படும். இதய பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு, அறுவை சிகிச்சை இல்லாமல், இதயநாள அடைப்புகளை அகற்ற, இக்கருவி பயன்படுகிறது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணி முடியும் நிலையில் இருப்பதாக சொல்ல முடியாது, ஒரு பிளாக் மட்டுமே கட்டியுள்ளனர். முழுமையாக பணிகள் முடிய, 2028ம் ஆண்டு வரை ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.

