sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

டிசம்பர் 24ல் விண்ணில் பாய்கிறது அமெரிக்க செயற்கைக்கோள்

/

டிசம்பர் 24ல் விண்ணில் பாய்கிறது அமெரிக்க செயற்கைக்கோள்

டிசம்பர் 24ல் விண்ணில் பாய்கிறது அமெரிக்க செயற்கைக்கோள்

டிசம்பர் 24ல் விண்ணில் பாய்கிறது அமெரிக்க செயற்கைக்கோள்


UPDATED : டிச 21, 2025 12:58 PM

ADDED : டிச 21, 2025 01:00 PM

Google News

UPDATED : டிச 21, 2025 12:58 PM ADDED : டிச 21, 2025 01:00 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:
அமெரிக்காவின் 'புளூபேர்ட்' செயற்கைக்கோள் டிசம்பர் 24ம் தேதி காலை 8:54 மணிக்கு விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த ஏ.எஸ்.டி., நிறுவனம், தகவல் தொடர்பு சேவைக்காக, 6,500 கிலோ எடையில், 'புளூபேர்ட்' செயற்கைக்கோளை உருவாக்கி உள்ளது; இது, தொலைதுார கிராமங்களுக்கு, மொபைல் போன், அதிவேக இணையதள சேவைகளை வழங்க உதவும்.

இந்த செயற்கைக்கோளை, நம் நாட்டின், 'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு மையம், விண்ணில் செலுத்த உள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில், இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய ஏவுதளத்தில் இருந்து, வரும், டிசம்பர் 24ம் தேதி காலை, 8:54 மணிக்கு, எல்.வி.எம்., 3 ராக்கெட் வாயிலாக, 'புளூபேர்ட்' செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தப்பட உள்ளது.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. தற்போது செயற்கைக்கோள் விண்ணில் பாய்வதற்கு ஏவுதளத்தில் தயாராக இருக்கும் புகைப்படத்தை இஸ்ரோ சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே, இம்மாதம் 15, 21ம் தேதிகளில், 'புளூபேர்ட்' செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட இருந்த நிலையில், அத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us