UPDATED : நவ 05, 2024 12:00 AM
ADDED : நவ 05, 2024 08:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
அண்ணா நகர், அண்ணா நகர் கிழக்கு, ஆறாவது அவென்யூவில், 40 ஆண்டுகள் பழமையான முழு நேர நுாலகம் செயல்படுகிறது.
இந்நுாலக கட்டடத்தின் ஒரு பகுதி சேதமடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. அவற்றை முழுமையாக இடித்து, சீரமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. மேம்படுத்தப்பட உள்ள இந்த நுாலகத்தை, நேற்று காலை அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டு, அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்நிகழ்வில், வீட்டு வசதி வாரிய மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலர் காகர்லா உஷா, அண்ணா நகர் மண்டல குழு தலைவர் கூ.பி.ஜெயின் உள்ளிட்டோர் இருந்தனர்.