sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

இன்ஜி., கல்லுாரி பேராசிரியர்களுக்கு அண்ணா பல்கலை புது உத்தரவு

/

இன்ஜி., கல்லுாரி பேராசிரியர்களுக்கு அண்ணா பல்கலை புது உத்தரவு

இன்ஜி., கல்லுாரி பேராசிரியர்களுக்கு அண்ணா பல்கலை புது உத்தரவு

இன்ஜி., கல்லுாரி பேராசிரியர்களுக்கு அண்ணா பல்கலை புது உத்தரவு


UPDATED : ஆக 16, 2025 12:00 AM

ADDED : ஆக 16, 2025 10:49 PM

Google News

UPDATED : ஆக 16, 2025 12:00 AM ADDED : ஆக 16, 2025 10:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
அண்ணா பல்கலை கீழ் இயங்கும் இன்ஜினியரிங் கல்லுாரிகள், ஒவ்வொரு ஆண்டும் பல்கலையின் அங்கீகாரம் பெற வேண்டியது அவசியம்.

கடந்த ஆண்டு பல கல்லுாரிகள் அங்கீகாரம் பெறுவதற்காக, பேராசிரியர்களின் எண்ணிக்கையை போலியாக காண்பித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, அண்ணா பல்கலை விசாரித்து வருகிறது. இது போன்ற மோசடிகள் மீண்டும் நடக்காமல் இருக்க, அண்ணா பல்லை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, பல்கலை கீழ் இயங்கும், இன்ஜினியரிங் கல்லுாரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள், தங்களின் ஆதார் விவரங்களை ஆன்லைன் வழியே சமர்ப்பிக்க, அண்ணா பல்கலை அறிவுறுத்தியது. ஆதார் மற்றும் பிற சுய விபரங்களை, பேராசிரியர்கள் சமர்பிக்கும் பணி சமீபத்தில் நிறைவடைந்தது.

இந்நிலையில், ஒவ்வொரு மாதமும் ஆதார் மற்றும் சுய விபரங்களை, பேராசிரியர்கள் இணையதளம் வழியாக பல்கலையிடம் சமர்ப்பிக்க வேண்டும். அவை சரி பார்க்கப்படும் என, அண்ணா பல்கலை அறிவுறுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us