3 உதவியாளர் காலி பணியிடம் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்
3 உதவியாளர் காலி பணியிடம் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்
UPDATED : பிப் 04, 2026 01:10 AM
ADDED : பிப் 04, 2026 01:10 PM
திருத்தணி: திருத்தணி ஒன்றியத்தில் காலியாக உள்ள மூன்று அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு, வரும் 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, ஆணையர் தெரிவித்தார்.
திருத்தணி ஒன்றிய அலுவலகத்தில் காலியாக உள்ள மூன்று அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்புவதற்கு, மாவட்ட நிர்வாகம் ஒப்புதலுடன், நேற்று முதல் விண்ணப்பம் வினியோகம் செய்யப்படுகிறது.
திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலர் குமார் கூறியதாவது:
திருத்தணி ஒன்றியத்தில் பிற்படுத்தப்பட்ட பிரிவு அலுவலக உதவியாளர் - பொது, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு அலுவலக உதவியாளர் - பொது மற்றும் ஆதிதிராவிடர் அருந்ததி பிரிவு அலுவலக உதவியாளர் - பெண் ஆகிய மூன்று பணியிடங்கள் காலியாக உள்ளன.
பெண் உதவியாளர் பணியிடத்திற்கு, விதவை அல்லது கணவனால் கைவிடப்பட்டவர் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
பி.சி., மற்றும் எம்.பி.சி., பிரிவுக்கு, 18 - 34, ஆதிதிராவிடர் பிரிவுக்கு, 18 - 37 வரை இருக்க வேண்டும். இப்பணியிடங்களுக்கு, வரும் 9ம் தேதி மாலை 5:00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

