ஐ.டி.ஐ., தேர்வு பெற்றவர்களுக்கு நாளை அப்ரன்டீஸ் சேர்க்கை முகாம்
ஐ.டி.ஐ., தேர்வு பெற்றவர்களுக்கு நாளை அப்ரன்டீஸ் சேர்க்கை முகாம்
UPDATED : மார் 08, 2026 12:41 PM
ADDED : மார் 08, 2026 12:43 PM
கரூர்:
கரூரில், ஐ.டி.ஐ., தேர்வு பெற்ற மாணவர்களுக்கு அப்ரன்டீஸ் சேர்க்கை முகாம் நாளை நடக்கிறது என, கலெக்டர் ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
கரூர், வெண்ணைமலை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், தேசிய தொழிற் பழகுனர் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ், பிரதம மந்திரி தேசிய தொழிற் பழகுனர் (அப்ரன்டீஸ்) சேர்க்கை முகாம் நாளை (9ம் தேதி) காலை, 10:00 முதல் மாலை, 04:00 மணி வரை நடக்கிறது.
அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி முடித்து, தொழிற் பழகுனர் பயிற்சி மேற்கொள்ளாதவர்கள் கல்வி, ஜாதி சான்றிதழ், பாஸ்போர்ட் போட்டோ, ஆதார் அட்டை, தேசிய, மாநில தொழிற் பயிற்சி சான்றிதழ் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களுடன் கலந்து கொள்ளலாம்.
மேலும் விபரங்களை அறிய 04324 299422; 9443015914; 9566992442 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

