sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

ஐ.ஐ.டி.,யில் அரசு பள்ளி மாணவர்களா? தி.மு.க., அரசின் பொய்: அன்புமணி புகார்

/

ஐ.ஐ.டி.,யில் அரசு பள்ளி மாணவர்களா? தி.மு.க., அரசின் பொய்: அன்புமணி புகார்

ஐ.ஐ.டி.,யில் அரசு பள்ளி மாணவர்களா? தி.மு.க., அரசின் பொய்: அன்புமணி புகார்

ஐ.ஐ.டி.,யில் அரசு பள்ளி மாணவர்களா? தி.மு.க., அரசின் பொய்: அன்புமணி புகார்


UPDATED : செப் 01, 2025 12:00 AM

ADDED : செப் 01, 2025 08:37 AM

Google News

UPDATED : செப் 01, 2025 12:00 AM ADDED : செப் 01, 2025 08:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
'சென்னை ஐ.ஐ.டி., யில், 28 அரசு பள்ளி மாணவர்கள் சேர்ந்ததாக, தி.மு.க., அரசு பொய் பரப்புகிறது' என, பா.ம.க., தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.

அவரது அறிக்கை:


தமிழக அரசின், 'அனைவருக்கும் ஐ.ஐ.டி.,' திட்டத்தின் கீழ், அரசு பள்ளி மாணவர்கள் 28 பேர், சென்னை ஐ.ஐ.டி.,யில் சேர்ந்திருப்பதாக, அமைச்சர் மகேஷ் அறிவித்துள்ளார். இரு கட்டமாக நடக்கும், ஜே.இ.இ., நுழைவுத்தேர்வு வாயிலாகவே, ஐ.ஐ.டி.,யில் சேர முடியும். இந்த முறையில் சேர்ந்தால் தான், ஐ.ஐ.டி., மாணவர்களாக கருதப்படுவர்.

அமைச்சர் குறிப்பிட்ட, 28 மாணவர்களில் 25 பேர், சென்னை ஐ.ஐ.டி., தனிப்பட்ட முறையில் நடத்தும், பி.எஸ்., டேட்டா சயின்ஸ் படிப்பிலும், மூன்று பேர் பி.எஸ்., எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் படிப்பிலும் சேர்ந்துள்ளனர்.

இதற்கு நுழைவுத்தேர்வு எழுத, 11ம் வகுப்பு தேர்ச்சியே போதுமானது. அதில், 17 முதல் 81 வயது வரை சேர முடியும். இணைய வழியிலான இந்த படிப்புகளில், தற்போது 36,000 பேர் படிக்கின்றனர்.

மேலும், பி.எஸ்., டேட்டா சயின்ஸ், பி.எஸ்., எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் படிப்புகள், தேசிய கல்விக் கொள்கை அடிப்படையில் நடத்தப்படுபவை. அந்த கல்வி கொள்கையை கடுமையாக எதிர்க்கும் தி.மு.க., இப்போது அதே கொள்கையில் நடத்தும் படிப்பில் மாணவர்களை திணிக்கிறது.

இது தி.மு.க.,வின் இரட்டை வேடத்தை காட்டுகிறது. பொய்களை பரப்பும் தி.மு.க., அரசுக்கு, தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அமைச்சர் மகேஷ் விளக்கம்

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் அளித்த பேட்டி:



சென்னை ஐ.ஐ.டி., மற்றும் தமிழக அரசு இணைந்து, 'அனைவருக்கும் ஐ.ஐ.டி.எம்.,' என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், இதுவரை 354 அரசு பள்ளி மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

நடப்பு கல்வியாண்டு, 28 பேர் சேர்ந்துள்ளனர். இவர்கள், இன்ஜினியரிங் கல்லுாரியில் படித்துக் கொண்டே, ஐ.ஐ.டி., வழங்கும், பி.எஸ்., டிகிரியை, 'ஆன்லைன்' வழியே படிக்கலாம். படிப்பை நிறைவு செய்ததும் ஐ.ஐ.டி., சான்றிதழ் கிடைக்கும். மூன்று ஆண்டு படிப்போருக்கு டிப்ளமா சான்றிதழ், நான்காண்டு படிப்போருக்கு பி.டெக்., சான்றிதழ் கிடைக்கும்.

அப்படி என்றால், அவர்கள் ஐ.ஐ.டி., மாணவர்களாகத்தான் பார்க்கப்படுவர். வணிகவியல் படித்த மாணவர்கள் கூட, ஐ.ஐ.டி., வழங்கும் இந்த படிப்பில் சேர்ந்து, இன்ஜினியரிங் பட்டதாரிகளாகின்றனர். ஐ.ஐ.டி., சான்றிதழ் கிடைப்பது, அவர்களின் மதிப்பை கூட்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us