sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

சீனாவில் ஆயுர்வேத சிகிச்சை; கேரள டாக்டர் தம்பதிக்கு டிமாண்ட்

/

சீனாவில் ஆயுர்வேத சிகிச்சை; கேரள டாக்டர் தம்பதிக்கு டிமாண்ட்

சீனாவில் ஆயுர்வேத சிகிச்சை; கேரள டாக்டர் தம்பதிக்கு டிமாண்ட்

சீனாவில் ஆயுர்வேத சிகிச்சை; கேரள டாக்டர் தம்பதிக்கு டிமாண்ட்


UPDATED : ஜூலை 16, 2025 12:00 AM

ADDED : ஜூலை 16, 2025 12:52 PM

Google News

UPDATED : ஜூலை 16, 2025 12:00 AM ADDED : ஜூலை 16, 2025 12:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பீஜிங்:
இந்தியாவின் பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவ முறையை, கேரள டாக்டர் தம்பதி சீனாவில் பிரபலப்படுத்தி வருகின்றனர்.

மூலிகை மருந்துகள், மசாஜ் சிகிச்சை, உணவுமுறை, யோகா போன்றவற்றை உள்ளடக்கியது ஆயுர்வேதம். நீண்ட பாரம்பரியமுள்ள ஆயுர்வேதத்தை, இந்தியர்கள் மட்டுமல்லாது வெளிநாட்டினரும் நாடி வருகின்றனர்.

இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த டாக்டர் முகமது ஷபீக், அவரது மனைவி டாக்டர் டேன் ஆகியோர் இணைந்து, ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை முறை மற்றும் அதற்கான பயிற்சியை சீனாவில் வழங்கி வருகின்றனர்.

இதில், பிரபலமான சிரோதராவும் அடங்கும். இது மெதுவாகவும், சீராகவும் நெற்றியில் மருந்து எண்ணெய் சொட்டும் ஒரு பாரம்பரிய செயல்முறையாகும்.

கேரளாவின், 600 ஆண்டு பழமையான சங்கம்பள்ளி குருக்கள் என்ற பாரம்பரிய ஆயுர்வேத குடும்பத்தைச் சேர்ந்தவர் முகமது ஷபீக். புதுச்சேரியில் பயிற்சி பெற்றபோது, பல சீன நோயாளிகள் ஆயுர்வேத சிகிச்சைக்கு விரும்பி வந்ததால், 2016ல் சீனாவுக்குச் சென்று மருத்துவமனையை துவக்கினார்.

நம் நாட்டின் ஆயுர்வேத சிகிச்சை முறையும், பாரம்பரிய சீன மருத்துவமும் பல ஒற்றுமைகளை கொண்டிருப்பதே, சீனர்கள் இதை அதிகம் விரும்ப ஒரு காரணம் என்று அவர் கூறுகிறார்.

மேலும், தங்கள் ஆயுர்வேத பயிற்சி வகுப்புகள் பிரபலமடைந்து, பல மாணவர்கள் பீஜிங், ஷாங்காய் போன்ற நகரங்களில் சிகிச்சை மையங்களை திறந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.







      Dinamalar
      Follow us