sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

நல்லாசிரியர் விருது: சி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவு

/

நல்லாசிரியர் விருது: சி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவு

நல்லாசிரியர் விருது: சி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவு

நல்லாசிரியர் விருது: சி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவு


UPDATED : ஜூலை 27, 2024 12:00 AM

ADDED : ஜூலை 27, 2024 09:34 AM

Google News

UPDATED : ஜூலை 27, 2024 12:00 AM ADDED : ஜூலை 27, 2024 09:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
நல்லாசிரியர் விருதுக்கு, தகுதியான ஆசிரியர்களை வரும், 14ம் தேதிக்குள் பரிந்துரைக்க வேண்டும் என, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்தநாளான செப்.,5ம் தேதி, தேசிய ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மத்திய, மாநில அரசுகளின் சார்பில், நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான விருதுக்கு, மத்திய அரசின் சார்பில், ஏற்கனவே விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. தமிழக அரசின் சார்பில், 386 விருதுகள் வழங்கப்படுகின்றன. இதற்கும் தனியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன

இந்நிலையில், முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பித்தவர்களை மாவட்ட அளவில் வரவழைத்து, விருதுக்கான கட்டுப்பாடுகளை பின்பற்றி, மாவட்ட அளவில் பரிந்துரை பட்டியலை தயாரிக்க வேண்டும். வரும், 14ம் தேதிக்குள் இந்த பட்டியலை, பள்ளிக்கல்வி இயக்குனரகத்துக்கு அனுப்ப வேண்டும் என, கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us