sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

வெடிகுண்டு மிரட்டல்: ஒரே நாளில் 50 பள்ளிகளுக்கு பறந்த டில்லி போலீஸ்

/

வெடிகுண்டு மிரட்டல்: ஒரே நாளில் 50 பள்ளிகளுக்கு பறந்த டில்லி போலீஸ்

வெடிகுண்டு மிரட்டல்: ஒரே நாளில் 50 பள்ளிகளுக்கு பறந்த டில்லி போலீஸ்

வெடிகுண்டு மிரட்டல்: ஒரே நாளில் 50 பள்ளிகளுக்கு பறந்த டில்லி போலீஸ்


UPDATED : ஆக 21, 2025 12:00 AM

ADDED : ஆக 21, 2025 09:47 AM

Google News

UPDATED : ஆக 21, 2025 12:00 AM ADDED : ஆக 21, 2025 09:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:
தலைநகர் டில்லியில் ஒரே நாளில் 50 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டில்லியில் மால்வியா நகரில் பிரபலமான பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக இ மெயில் மூலம் மிரட்டல் வந்தது. பள்ளி நிர்வாகத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, வெடிகுண்டு செயலிழக்கும் நிபுணர்கள் உதவியுடன் பள்ளிக்கு வந்த போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது எந்த வெடிகுண்டும் கண்டுபிடிக்கப் படவில்லை. இதுவெறும் மிரட்டல் மட்டுமே என்று தெரிய வந்தது.

இதேபோல், கரோல் பாக் பகுதியில் உள்ள மற்றொரு பள்ளிக்கும் இ மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. சோதனையில் அதுவும் வெறும் மிரட்டல் என்று தெரிய வந்தது. இதுதவிர, மேலும் 48 பள்ளிகள் என இன்று ஒரே நாளில் மட்டும் மொத்தம் 50 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுககப்பட்டுள்ளது.

முதலில் 2 பள்ளிகளுக்கும் அதன் பின்னர் 48 பள்ளிகளுக்கும் விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல்கள் எங்கிருந்து அனுப்பப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அண்மையில் டில்லியில் ஆக.18ம் தேதி ஒரே நாளில் 32 பள்ளிகளுக்கு இதுபோல் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது நினைவிருக்கலாம்.






      Dinamalar
      Follow us