UPDATED : ஆக 23, 2025 12:00 AM
ADDED : ஆக 23, 2025 10:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
அண்ணா பல்கலையின் ஆராய்ச்சி நிதியுதவி மற்றும் ஆலோசனை மையம், இன்ஜினியரிங் மாணவர்கள், புத்தாக்க திட்டங்களை உருவாக்க அழைப்பு விடுத்துள்ளது.
முன்மாதிரியான முயற்சிகளை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு, 25,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். மாணவர்கள், தங்கள் கருத்துருவை, செப்., 3க்குள் வழங்க வேண்டும் என, அண்ணா பல்கலை அறிவுறுத்தி உள்ளது.