sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ். சுவாமிநாதனின் நூற்றாண்டு விழா

/

பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ். சுவாமிநாதனின் நூற்றாண்டு விழா

பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ். சுவாமிநாதனின் நூற்றாண்டு விழா

பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ். சுவாமிநாதனின் நூற்றாண்டு விழா


UPDATED : ஜூலை 31, 2025 12:00 AM

ADDED : ஜூலை 31, 2025 09:32 AM

Google News

UPDATED : ஜூலை 31, 2025 12:00 AM ADDED : ஜூலை 31, 2025 09:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
பசுமைப் புரட்சியின் தந்தையாகக் போற்றப்படும் பாரத ரத்னா, மறைந்த பேராசிரியர் எம்.எஸ். சுவாமிநாதனின் 100-வது பிறந்த நாள் விழா ஆகஸ்ட் 7 முதல் 9 வரை புதுடில்லியில் நடைபெறுகிறது. இந்த விழாவை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார்.

இந்த நிகழ்வை முன்னிட்டு விழா குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.

பசுமைப் புரட்சி - உயிரி அடிப்படையில் மகிழ்ச்சிக்கான பாதை என்ற கருப்பொருளில் ஆண்டு முழுவதும் நடைபெறும் விழா நிகழ்வுகளை மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில், இந்திய வேளாண் நிறுவனம், தேசிய வேளாண் அறிவியல் கல்வி நிறுவனம் மற்றும் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

அறிவியலாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் சமூக தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ள இந்த விழாவில், பேராசிரியர் சுவாமிநாதனின் நீடித்த விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பிற்கான பங்களிப்பு குறித்து விரிவான அமர்வுகள் இடம்பெறவுள்ளன.

மாநாட்டில் பருவநிலை மாற்றங்களை எதிர்கொள்ளும் நவீன வேளாண் முறைகள், பல்லுயிர் பெருக்கம், பாலினம் சார்ந்த ஊட்டச்சத்து, சுகாதாரம், அறிவியல், மற்றும் இளையோரின் பங்களிப்பு உள்ளிட்ட விஷயங்கள் குறித்தும் விவாதங்கள் நடைபெறவுள்ளன.

விழாவின் ஒரு பகுதியாக இயற்கை விவசாயம் குறித்த கேள்வி-பதில் அமர்வும், மாநாட்டு கருப்பொருளை சார்ந்த பிரத்யேக நிகழ்ச்சிகளும் இடம்பெறும். இதில் தலைசிறந்த பேச்சாளர்கள் மற்றும் நிறுவனங்கள் கலந்துகொள்ள உள்ளனர்.






      Dinamalar
      Follow us