UPDATED : டிச 24, 2024 12:00 AM
ADDED : டிச 24, 2024 10:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை :
சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை டாக்டர் ஆனந்த்குமார், இந்திய செயற்கை பல்லியல் கழக தலைவராக தேர்வாகி உள்ளார்.
இந்திய செயற்கை பல்லியல் கழகத்தின் ஆண்டு விழா, ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடந்தது. இதில் கழகத்தின், 2025 - 26ம் ஆண்டுக்கான தலைவராக டாக்டர் ஆனந்த்குமார் தேர்ந்தெடுக் கப்பட்டார்.
இவர், சென்னை போரூர் ராமச்சந்திரா பல் மருத்துவ கல்லுாரியில் பேராசிரியராக பணிபுரிகிறார்.
செயற்கை பல்லியல் கழகத்தின் துணைத் தலைவராக, மருத்துவ இதழின் தலைமை ஆசிரியராக இருந்துள்ளார். தற்போது, அக்கழகத்தின் தமிழகம் - புதுச்சேரி கிளையின் தலைவராகி உள்ளார்.