sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 12, 2026 ,தை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 செய்முறை தேர்வு

/

அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 செய்முறை தேர்வு

அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 செய்முறை தேர்வு

அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 செய்முறை தேர்வு


UPDATED : பிப் 12, 2026 02:06 PM

ADDED : பிப் 12, 2026 02:09 PM

Google News

UPDATED : பிப் 12, 2026 02:06 PM ADDED : பிப் 12, 2026 02:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை:
வால்பாறையில் உள்ள பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கான செய்முறை தேர்வு மூன்றாவது நாளாக நடக்கிறது.

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட வால்பாறையில், அட்டகட்டி, சோலையாறு அணை மற்றும் வால்பாறை நகர் பகுதியில் மொத்தம் ஏழு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் இந்த கல்வியாண்டில் பொதுத்தேர்வு எழுத தயாராகி வருகின்றனர்.

இதனை தொடர்ந்து, கடந்த 9ம் தேதி முதல் செய்முறை தேர்வுகள் துவங்கப்பட்டு, தொடர்ந்து நடக்கிறது. வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளி, திரு இருதய மேல்நிலைப் பள்ளி, அட்டகட்டி பள்ளிகளில் செய்முறை தேர்வுகள் நடைபெற்றன. மூன்றாவது நாளான நேற்று வேதியியல் பாடப்பிரிவிற்கான செய்முறை தேர்வு நடைபெற்றது.

அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் கூறுகையில், 'வால்பாறை தாலுகாவில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 மாணவர்களுக்கான, செய்முறை தேர்வு, வரும் 14ம் தேதி வரை நடக்கிறது. இரண்டு கட்டமாக செய்முறை தேர்வுகள் நடக்கிறது', என்றார்.






      Dinamalar
      Follow us