மத்திய, மாநில அரசின் போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்பு
மத்திய, மாநில அரசின் போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்பு
UPDATED : பிப் 06, 2026 01:45 PM
ADDED : பிப் 06, 2026 01:48 PM
விழுப்புரம்: விழுப்புரம் வேலை வாய்ப்பு மையத்தில், மத்திய, மாநில அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு நடக்கும் பயிற்சியில் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கலெக்டர் அலுவக செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில், மத்திய, மாநில அரசுகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது மத்திய அரசால் நடத்தப்படும் ஆர்.ஆர்.பி., ஐ.பி.பி.எஸ்., எஸ்.எஸ்.சி., போன்ற போட்டித் தேர்வுகளுக்கும், விழுப்புரம் மாவட்ட வேலை மையம் சார்பில் பயிற்சி வகுப்புகள், அதற்காக பாட வாரியான தேர்வுகளும் மற்றும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளது.
மத்திய அரசு பணிக்கான தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு அரிய வாய்ப்பாகும். போட்டி தேர்வர்கள், இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயன் பெறலாம்.
மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் வெளியிட்டுள்ள இந்தாண்டு குரூப் 4, குரூப் 2 ஆகிய தேர்வுகளுக்கும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. இதில், பங்கேற்று பயன் பெறலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

