sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

96.02 சதவீத தேர்ச்சியுடன் மாநிலத்தில் கோவை முதலிடம்

/

96.02 சதவீத தேர்ச்சியுடன் மாநிலத்தில் கோவை முதலிடம்

96.02 சதவீத தேர்ச்சியுடன் மாநிலத்தில் கோவை முதலிடம்

96.02 சதவீத தேர்ச்சியுடன் மாநிலத்தில் கோவை முதலிடம்


UPDATED : மே 18, 2024 12:00 AM

ADDED : மே 18, 2024 10:19 AM

Google News

UPDATED : மே 18, 2024 12:00 AM ADDED : மே 18, 2024 10:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:
பிளஸ் 1 பொதுத் தேர்வில் 96.02 சதவீத தேர்ச்சியுடன் மாநிலத்தில் கோவை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. வழக்கம்போல மாணவர்களைவிட மாணவிகளே அதிக தேர்ச்சி சதவீதம் பெற்றுள்ளனர்.

தமிழகம் முழுவதும் பிளஸ் 1 பொதுத் தேர்வு மார்ச் 4ம் தேதி துவங்கி 25ம் தேதி நிறைவடைந்தது. இந்த தேர்வை கோவை மாவட்டத்தில், 113 அரசுப் பள்ளிகள், 41 அரசு உதவிபெறும் பள்ளிகள், 324 தனியார் பள்ளிகள் என 478 பள்ளிகளைச் சேர்ந்த 16 ஆயிரத்து 484 மாணவர்கள், 19 ஆயிரத்து 144 மாணவிகள் என 35 ஆயிரத்து 628 பேர் எழுதினர். இதைத்தொடர்ந்து, தேர்வு முடிவுகள் நேற்று காலை 9:30 மணிக்கு வெளியிடப்பட்டன. மாவட்டத்தில், 15 ஆயிரத்து 546 மாணவர்கள், 18 ஆயிரத்து 664 மாணவிகள் என மொத்தம் 34 ஆயிரத்து 210 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில், மாணவர்கள் 94.31 சதவீதம், மாணவிகள் 97.49 சதவீதமும் என மொத்தம் 96.02 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 0.29 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டில் கோவை மாவட்டம் 95.73 சதவீத தேர்ச்சி விகிதம் பெற்று மாநில அளவில் மூன்றாம் இடம்பிடித்தது. இந்த ஆண்டு 96.02 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் கோவை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.

மாணவர்களுக்கு மொபைல் போன் வழியாக மதிப்பெண்கள் குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டன. அரசு தேர்வுகள் துறை இணையதளம் மற்றும் அந்தந்தப் பள்ளிகள் வாயிலாக மாணவர்கள் தங்களது ரிசல்ட்டை அறிந்துகொண்டனர்.

இதுகுறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி கூறுகையில், கோவை மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது. பள்ளிகளில் தொடர்ந்து சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கடின உழைப்பால் முதலிடம் சாத்தியமாகியுள்ளது. தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு துணைத் தேர்வுகள் ஜூலை மாதத்தில் நடைபெறும். ஆசிரியர்கள் மூலம் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும், என்றார்.


மாற்றுத்திறனாளிகள்96.99 சதவீத தேர்ச்சி
பிளஸ் 1 பொதுத்தேர்வை மாற்றுத்திறனாளிமாணவர்கள் 152 பேரும், மாணவிகள் 114 பேரும் என 266 பேர் எழுதினர். இதில், 149மாணவர்கள், 109 மாணவிகள் என 258 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 98.03 சதவீதம், மாணவிகள் 95.61 சதவீதம் என மொத்தம் 96.99 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.






      Dinamalar
      Follow us