UPDATED : மார் 13, 2026 01:25 PM
ADDED : மார் 13, 2026 01:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை:
சிவகங்கை அரசு மகளிர் கலைக் கல்லுாரியில் அரசு அருங்காட்சியகம், தொல்நடைக்குழு இணைந்து தமிழரின் மரபுகளை பாதுகாப்போம் என்னும் தலைப்பில் கருத்தரங்கத்தை நடத்தினர்.
முதல்வர் நளதம் தலைமை வகித்தார். பேராசிரியர் வெண்ணிலா வரவேற்றார். மன்னர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரராஜன், தொல்நடைக்குழு செயற்குழு உறுப்பினர் வித்யா பேசினர்.
அருங்காட்சியக காப்பாட்சியர் மருதுபாண்டியன் இலக்கியங்களும் கல்வெட்டுகளும் எனும் தலைப்பில் பேசினார். தொல்நடைக்குழு நிறுவனர் காளிராசா தமிழ் எழுத்துகளின் வளர்ச்சி நிலை குறித்து பேசினார்.
பேராசிரியர்கள் அலமேலு, முனீஸ்வரன், அஸ்வத்தாமன், குமரமுருகன், தொல்நடைக்குழு செயலர் நரசிம்மன், இணைச் செயலர் முத்துக்குமரன், கல்லுாரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

