sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

அரசியல் பிரமுகருக்கு மலர் துாவி வரவேற்பு மாணவியரை ஈடுபடுத்திய ஆசிரியர் மீது புகார்

/

அரசியல் பிரமுகருக்கு மலர் துாவி வரவேற்பு மாணவியரை ஈடுபடுத்திய ஆசிரியர் மீது புகார்

அரசியல் பிரமுகருக்கு மலர் துாவி வரவேற்பு மாணவியரை ஈடுபடுத்திய ஆசிரியர் மீது புகார்

அரசியல் பிரமுகருக்கு மலர் துாவி வரவேற்பு மாணவியரை ஈடுபடுத்திய ஆசிரியர் மீது புகார்


UPDATED : செப் 21, 2024 12:00 AM

ADDED : செப் 21, 2024 10:46 AM

Google News

UPDATED : செப் 21, 2024 12:00 AM ADDED : செப் 21, 2024 10:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம்:
அரசியல் பிரமுகருக்கு மலர் துாவி வரவேற்பளிக்க, அரசு பள்ளி மாணவியரை ஈடுபடுத்திய ஆசிரியர் மீது, துறைரீதியாக நடவடிக்கை எடுக்க, நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, குமாரபாளையம் இந்து முன்னணி நிர்வாகி விக்னேஷ் தலைமையில், நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:



திருச்செங்கோடு தாலுகா, எலச்சிபாளையம் ஒன்றியம், பெரியமணலி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த, 13 அன்று மாணவிகளுக்கு தமிழக அரசின் விலை இல்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. அதில் பங்கேற்க வந்த, நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க., செயலர் மதுரா செந்திலுக்கு வரவேற்பு அளிக்கும் வகையில், பள்ளி மாணவிகளை வரிசையாக நிற்க வைத்து மலர் துாவி வரவேற்றுள்ளனர். இதற்கு காரணமான ஆசிரியர்கள் மீது, துறை சார்ந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us