sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

அண்ணா பல்கலை மாணவி வழக்கில் போலீசாருக்கும் தொடர்பு!

/

அண்ணா பல்கலை மாணவி வழக்கில் போலீசாருக்கும் தொடர்பு!

அண்ணா பல்கலை மாணவி வழக்கில் போலீசாருக்கும் தொடர்பு!

அண்ணா பல்கலை மாணவி வழக்கில் போலீசாருக்கும் தொடர்பு!


UPDATED : ஜன 22, 2025 12:00 AM

ADDED : ஜன 22, 2025 10:46 AM

Google News

UPDATED : ஜன 22, 2025 12:00 AM ADDED : ஜன 22, 2025 10:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
அண்ணா பல்கலை மாணவி, பாலியல் வன்முறை வழக்கில் கைதான, தி.மு.க., அனுதாபி ஞானசேகரனிடமும், அவருடன் நெருங்கிய நட்பில் இருந்த போலீசாரிடமும், சிறப்பு புலனாய்வு குழு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சிறையில் உள்ள ஞானசேகரன் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததால், அவரை நேற்று அண்ணா நகர் துணை கமிஷனர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, சிறப்பு புலனாய்வு குழு போலீசார் விசாரணையை கடுமையாக்கினர். அப்போது, தன்னுடன் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருந்த, கோட்டூர்புரம் மற்றும் அபிராமபுரம் போலீசார் குறித்த தகவல்களை தெரிவித்துள்ளார். இதில், அபிராமபுரம் காவல் நிலைய எழுத்தர் குறித்தும் சில தகவல்களை தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, சிறப்பு புலனாய்வு குழுவினர், ஞானசேகரனின் கூட்டாளிகளாக செயல்பட்ட போலீசாரிடமும் விசாரணையை துவக்கி உள்ளனர். ஞானசேகரன், போலீஸ் சீருடை மற்றும் வாக்கி டாக்கி சகிதமாக, அண்ணா பல்கலை வளாகத்தில் சுற்றிய தகவல், சிறப்பு புலனாய்வு குழுவுக்கு தெரிய வந்துள்ளது.

அந்த சீருடை யாருடையது என, போலீசார் மற்றும் ஞானசேகரனிடமும் விசாரணை நடக்கிறது. சிறப்பு புலனாய்வு குழுவில் இடம் பெற்றுள்ள ஆவடி துணை கமிஷனர் அய்மன் ஜமால், சேலம் துணை கமிஷனர் பிருந்தா ஆகியோரும் தனித்தனியே, ஞானசேகரனிடம் விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.






      Dinamalar
      Follow us