UPDATED : ஏப் 12, 2026 11:20 AM
ADDED : ஏப் 12, 2026 11:21 AM
அ நிறம் | அளவு
மதுரை:
மதுரை செந்தமிழ்க் கல்லூரியின் 61வது பட்டமளிப்பு விழா செயலாளர் தசரதராமன் தலைமையில் நடந்தது. நான்காம் தமிழ்ச் சங்க செயலாளர் மாரியப்ப முரளி முன்னிலை வகித்தார்.
முதல்வர் சாந்திதேவி வரவேற்றார். திருவாரூர் மத்திய பல்கலை துணைவேந்தர் கிருஷ்ணன் பட்டம் வழங்கி பேசியதாவது: நம் உயர்வுக்காக தியாகம் செய்யும் பெற்றோரின் பாதங்களில் இறைவன் இருக்கிறான்.
நம் உயிர் உள்ளவரை அவர்களை நினைக்க வேண்டும். வாழ்க்கையில் பெருமையைச் சேர்க்க படிப்பு மட்டுமே போதாது. ஒழுக்கம், நேர்மை, பிறரை மதிப்பது உள்ளிட்ட நற்குணங்களைப் பெறுவது அவசியம்.
தினமும் ஒரு மணி நேரமாவது இயந்திர வாழ்வில் இருந்து நாம் வெளிவர வேண்டும் என்றார். பேராசிரியர் ராஜிவ்காந்தி தொகுத்து வழங்கினார். துணை முதல்வர் சுப்புலட்சுமி நன்றி கூறினார்.
மதுரை செந்தமிழ்க் கல்லூரியின் 61வது பட்டமளிப்பு விழா செயலாளர் தசரதராமன் தலைமையில் நடந்தது. நான்காம் தமிழ்ச் சங்க செயலாளர் மாரியப்ப முரளி முன்னிலை வகித்தார்.
முதல்வர் சாந்திதேவி வரவேற்றார். திருவாரூர் மத்திய பல்கலை துணைவேந்தர் கிருஷ்ணன் பட்டம் வழங்கி பேசியதாவது: நம் உயர்வுக்காக தியாகம் செய்யும் பெற்றோரின் பாதங்களில் இறைவன் இருக்கிறான்.
நம் உயிர் உள்ளவரை அவர்களை நினைக்க வேண்டும். வாழ்க்கையில் பெருமையைச் சேர்க்க படிப்பு மட்டுமே போதாது. ஒழுக்கம், நேர்மை, பிறரை மதிப்பது உள்ளிட்ட நற்குணங்களைப் பெறுவது அவசியம்.
தினமும் ஒரு மணி நேரமாவது இயந்திர வாழ்வில் இருந்து நாம் வெளிவர வேண்டும் என்றார். பேராசிரியர் ராஜிவ்காந்தி தொகுத்து வழங்கினார். துணை முதல்வர் சுப்புலட்சுமி நன்றி கூறினார்.


