UPDATED : ஜூலை 10, 2025 12:00 AM
ADDED : ஜூலை 10, 2025 09:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை:
உடுமலை அரசு கலைக்கல்லூரியில், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான அடுத்தகட்ட கலந்தாய்வு இன்று நடக்கிறது.
உடுமலை அரசு கல்லுாரியில், இளநிலைப் பாடப்பிரிவுகளில் மொத்தம், 864 இடங்கள் உள்ளன. இதுவரை நடந்த கலந்தாய்வுகளில், 759 இடங்கள் நிரப்பப்பட்டன. இன்னும் 105 இடங்கள் உள்ளன.
இதற்கான கலந்தாய்வுக்கு, ஏற்கனவே விண்ணப்பித்து வர இயலாத மாணவர்களும், கலந்தாய்வில் கலந்துகொண்டு, வாய்ப்பு கிடைக்காத மாணவர்களும், ஆன்லைனில் புதிதாக விண்ணப்பித்த மாணவர்களும், இதுவரை ஆன்லைனில் விண்ணப்பிக்காத மாணவர்களும், இன்று காலை, 9:00 மணிக்கு நடக்கும், கலந்தாய்வில் பங்கேற்கலாம், என கல்லூரி முதல்வர் (பொ) சிவக்குமார் தெரிவித்துள்ளார்.