sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

மாணவர்களுக்கு சாலை வசதி இல்லை;மத்திய அரசிடம் பெற்ற நிதி எங்கே: அண்ணாமலை

/

மாணவர்களுக்கு சாலை வசதி இல்லை;மத்திய அரசிடம் பெற்ற நிதி எங்கே: அண்ணாமலை

மாணவர்களுக்கு சாலை வசதி இல்லை;மத்திய அரசிடம் பெற்ற நிதி எங்கே: அண்ணாமலை

மாணவர்களுக்கு சாலை வசதி இல்லை;மத்திய அரசிடம் பெற்ற நிதி எங்கே: அண்ணாமலை


UPDATED : ஜூலை 10, 2025 12:00 AM

ADDED : ஜூலை 10, 2025 09:54 AM

Google News

UPDATED : ஜூலை 10, 2025 12:00 AM ADDED : ஜூலை 10, 2025 09:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
கிராமங்களில் சாலை வசதி இல்லாததால் பள்ளி செல்லும் மாணவர்கள் அவதிக்குள்ளான நிலையில், மத்திய அரசிடமிருந்து பெற்ற நிதி எங்கே, நீங்கள் ஒதுக்கிய நிதி எங்கே என்று தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

அவரது அறிக்கை:


நாகப்பட்டினம் மாவட்டம், ஆழியூரை அடுத்துள்ள கடம்பரவாழ்க்கை கிராமத்தில், சாலை வசதி இல்லாமல், பொதுமக்கள் வயல் வரப்பு ஒற்றை வழிப் பாதையைப் பயன்படுத்தி வருகின்றனர். பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்கள் தொடங்கி, மருத்துவ அவசரச் சிகிச்சைக்குச் செல்லும் மக்கள் வரை, இந்த ஒற்றை வழி பாதையையே பயன்படுத்த வேண்டியிருக்கிறது. மழைக்காலங்களில், பாம்பு உள்ளிட்ட விஷப் பூச்சிகள் தாக்குதலுக்கும் பொதுமக்கள் உள்ளாக வேண்டிய நிலை ஏற்படுகிறது.

மத்திய அரசின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ், இதுவரை தமிழகம் ரூ.5,886 கோடி நிதியைப் பெற்றிருக்கிறது. ஆனால், தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில், கிராமங்களில் சாலைகள் அமைக்கப்படவில்லை. திமுக ஆட்சிக்கு வந்ததும், மத்திய அரசுத் திட்டத்தின் பெயரை மட்டும் மாற்றி, முதல்வரின் கிராம சாலைகள் திட்டம் என்று வெறும் அறிவிப்பு மட்டும் வெளியிட்டார்கள். இதுவரை, இந்தத் திட்டத்தின் கீழ் எந்தெந்த கிராமங்களில் சாலைகள் அமைக்கப்பட்டன என்பது குறித்து

தமிழக பா.ஜ., சார்பாக வெள்ளை அறிக்கை கேட்டு இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. மத்திய அரசிடம் பெற்ற நிதி எங்கே, நீங்கள் ஒதுக்கிய நிதி எங்கே?

முதல்வர் ஸ்டாலினின் கையாலாகாத ஆட்சிக்கு, தமிழக கிராமங்களின் அவல நிலையே சாட்சி. பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்றாமல், கடந்த நான்கு ஆண்டுகளாக, தினந்தோறும் ஒரு நாள் கூத்துக்காக வேஷம் தரித்து ஆடும் நாடகத்தை முதல்வர் ஸ்டாலின் எப்போது நிறுத்தப் போகிறார்? தமிழகக் கிராமங்களுக்குச் சாலை வசதி ஏற்படுத்திக் கொடுப்பதை விட முக்கியமா உங்கள் விளம்பர நாடகங்கள்?

உங்கள் வேஷங்களை தமிழக மக்கள் விரைவில் கலைப்பார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

இவ்வாறு அண்ணாமலை அறிக்கையில் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us